கோல் அடித்த ரொனால்டோ
கால்பந்தாட்ட சாம்பியன் லீக் தொடரில் ஜூவன்டஸ் மற்றும் பேயர் லெவர்கூசன் அணிகள் மோதிய நிலையில், தன்னுடைய அணிக்காக ரொனால்டோ கோல் அடித்தார். இதையடுத்து அவரது ஜூவன்டஸ் அணி 2க்கு பூஜ்ஜியம் என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
செல்பி எடுக்க ஆர்வம்
இந்நிலையில் பாதுகாவலர்களை மீறி, மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர் ரொனால்டோவுடன் செல்பி எடுக்க வேகமாக முயன்று அவரது கழுத்தை பிடித்ததில் ரொனால்டோவிற்கு காயம் ஏற்பட்டது.
|
"உனக்கென்ன பைத்தியமா?"
இதனால் கடுப்பான ரொனால்டோ, மிகுந்த ஆத்திரத்துடன் அவரை பார்த்து உனக்கென்ன பைத்தியமா என்று கூக்குரலிட்டார். இதையடுத்து மைதானத்தின் காவலர்கள், அந்த ரசிகரை இழுத்து சென்று வெளியேற்றினர்.
மீண்டும் கோபமடைந்த ரொனால்டோ
இதையடுத்து மற்றொரு ரசிகரும் மைதானத்தில் அத்துமீறி நுழைந்து ரொனால்டோவை கட்டியணைக்க முயற்சித்தார். இந்த செயலாலும் மீண்டும் ரொனால்டோ கடுப்பானார்.
|
கழுத்தில் காயம்
இதையடுத்து தன்னுடைய கழுத்தை பிடித்துக் கொண்டிருந்த ரொனால்டோவை சக வீரர் கியான்லூகி பப்பன் அமைதிப் படுத்தியதை அடுத்து அவர் சமாதானமடைந்தார்.