கொலோன் : 2020 ஈரோப்பா லீக் இறுதிப் போட்டியில் இன்டர் மிலன் - செவில்லா அணிகள் மோத உள்ளன.
இந்த இறுதிப் போட்டி இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு கால்பந்து ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த ஆண்டு ஈரோப்பா லீக் தொடரில் லியோனல் மெஸ்ஸி - கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்கவில்லை. அவர்கள் பங்கேற்றுள்ள இரண்டு அணிகளுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறத் தவறின.
அதே போல, மான்செஸ்டர் யுனைட்டட் அணி மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த அணியும் அரை இறுதியில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது.
சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் இன்டர் மிலன் - செவில்லா மோதும் முதல் போட்டியே இந்த இறுதிப் போட்டி தான். அதனால், எந்த அணி வெற்றி பெறும் என கணிக்க முடியாத நிலை உள்ளது.
செவில்லா இது வரை ஐந்து முறை ஈரோப்பா லீக் கோப்பையை வென்றுள்ளது. கடைசியாக 2016இல் கோப்பையை வென்று இருக்கிறது அந்த அணி.
முதல் பைனலில் ஆடும் பாரிஸ்.. 6வது கோப்பையை நோக்கி பேயர்ன்.. பரபரப்பில் சாம்பியன்ஸ் லீக்!
இந்த இறுதிப் போட்டியில் இன்டர் மிலன் வெற்றி பெறும் என சில விமர்சகர்கள் கூறி உள்ளனர். எனினும், இரண்டு அணிகளும் சம பலமாக இருப்பதால் போட்டி சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செவில்லா ஸ்பானிஷ் அணி என்பதால் ஸ்பெயின் ரசிகர்கள் அந்த அணிக்கு ஆதரவாக இருக்கின்றனர். அதே போல, இன்டர் மிலன் இத்தாலியை சேர்ந்த அணி என்பதால் அந்த நாட்டின் தீவிர கால்பந்து ரசிகர்கள் அந்த அணிக்கு தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர்.