கோலாகல தொடர்
கால்பந்து ரசிகர்கள் வெப்பத்தால் பாதிக்க கூடாது என்பதற்காக போட்டி குளிர் காலத்தில், அதுவும் இரவு நேரத்தில் நடைபெறுகிறது. மேலும் மைதானம் முழுவதும் குளிர்சாதன வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஆடை கட்டுப்பாடு மற்றும் மதுபானத்திற்கு தடை போன்ற விசயங்களுக்கு கத்தார் தடை விதித்தாலும், மற்றபடி எந்த குறையும் இல்லாமல் கோலாகலமாக ஃபிஃபா கால்பந்து தொடர் நடைபெறுகிறது.
ஆசிய அணிகள் ஆதிக்கம்
முன்பு எப்போதும் போல் இல்லாமல், இம்முறை ஆசிய அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை சவுதியும், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகளை ஜப்பானும் தோற்கடித்து அதிர்ச்சி அளித்தது. நேற்று அனைத்திற்கும் மேலாக போர்ச்சுகலை தென் கொரியா வீழ்த்தி 3வது முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.
நாக்அவுட்
ஜெர்மனி, உருகுவே , பெல்ஜியம் போன்ற பலமான அணிகள் முதல் சுற்றிலேயே நடையை கட்டி இருப்பதால், பல எதிர்பாராத திருப்பங்களுடன் இந்த தொடர் நடைபெறுவதால், கத்தார் உலககோப்பை ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில், கத்தாரில் அதிக இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
திராவட மாடல்
இதனால், தோனி, சஞ்சு சாம்சன் ஆகியோரின் பேனர்களை உலககோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் நம்மவர்கள் காட்டி வந்தனர். இந்த நிலையில், நெல்லையை சேர்ந்த இளைஞர் முகமது, STATE OF திராவிட மாடல் என்ற வாசகங்களுடன் பதாகையை எந்தி கால்பந்து போட்டியை பார்த்து இருக்கிறார்.
தமிழக இளைஞர்
மேலும், உழவன் இல்லையே, உணவு இல்லை. உழவன் காப்போம், உயிர் நேயம் காப்போம். உழவனின் மகனாக பெருமைக் கொள்கிறேன் போன்ற வாசகங்களை அவர் ஏந்தி இருக்கிறார். திராவிட மாடல் என்ற கொள்கை ஏற்கனவே இந்தியா முழுவதும் எதிரொலித்த நிலையில், தற்போது அதனை நெல்லை இளைஞர் உலகத்திற்கு தனது பதாகை மூலம் காட்டி உள்ளார்.