ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
இறுதிப் போட்டியில் 0- 1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் அர்ஜென்டைனா வீழ்ந்ததுமே பிரேசிலில் ரசிகர்கள் உற்சாகக் கடலில் மூழ்கி விட்டனர். ஆட்டம் பாட்டத்துடன் தெருவில் கொண்டாடி மகிழ்ந்தார்கள் அர்ஜென்டைனாவின் தோல்வியை.
பட்டாசு வெடித்தும்
அதேபோல பலர் பட்டாசுகளையும் சரமாரியாக வெடித்து தங்களது சோகத்தையும், ஏக்கத்தையும் தீர்த்துக் கொண்டனராம்.
ஸ்டேடயத்திலேயே சரமாரி கொண்டாட்டம்
மேலும் போட்டி நடந்த ஸ்டேடியத்திலேயே கூட பலர் பட்டாசுகளை வெடித்து ஜெர்மனியின் வெற்றியையும், அர்ஜென்டைனாவின் தோல்வியையும் மந்தகாசமாக கொண்டாடியுள்ளனர்.
அழுங்கடா நல்லா அழுங்க...
மரகானா ஸ்டேடியத்திற்கு அருகில் ஒரு பாரில் குழுமியிருந்த பிரேசில் ரசிகர்கள் அர்ஜென்டைனாவே நல்லா அழு என்றும் கூக்குரலிட்டு மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனரம்.
கம்மென்று இருந்த அர்ஜென்டைனா ரசிகர்கள்
இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்காக ரியோ டி ஜெனீரோவின் கோபா பிளாங்கா கடற்கரையில் கூடியிருந்த பல ஆயிரம் அர்ஜென்டைனா ரசிகர்கள், பிரேசில் ரசிகர்கள் செய்த சேட்டையைப் பார்த்து எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தனராம்.
காப்பாத்திட்டடா சாமி....
கயோ பெர்ராஸ் என்ற 45 வயது பிரேசில் ரசிகர் கூறுகையில், நல்ல வேளையாக கடவுள் ஜெர்மனியைக் காப்பாற்றி விட்டார். அர்ஜென்டைனா மட்டும் ஜெயித்திருந்தால் நான் டென்ஷனாகியிருப்பேன் என்றார். அவர்கள் ஜெயித்திருந்தால் பல வருடங்களுக்கு எங்களை கேலி செய்தே காலத்தை ஓட்டியிருப்பார்கள் என்றும் அவர் காரணம் கூறினார்.
உணர்ச்சிகரமான போட்டி
கால்பந்தின் தாயகமாக கருதப்படுவது பிரேசில். அப்படிப்பட்ட நாட்டில் பரம எதிரியான அர்ஜென்டைனா வந்து கோப்பையை வென்றால் பிரேசிலியர்களுக்கு நிச்சயம் கஷ்டமாகத்தான் இருக்கும். அது நடக்காமல் போனது தாங்கள் தோற்ற வலியைக் கூட பிரேசில் ரசிகர்களுக்கு மறக்க வைத்து விட்டதாம்.
அம்புட்டு பயலுமே நம்ம பயலுக மாதிரியே இருக்காங்களே....!