அணியில் இடம்பிடித்தார்
ஒரு நாள் இடை நீக்கம் செய்யப்பட்ட ஸ்நேஜ் சிங் தற்போது மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். ஆனால் மற்றொரு வீரரான நிஜுகுமார் இன்னும் காயத்தில் இருந்து மீளாததால் அவர் இடம் பெறவில்லை.
முக்கிய முடிவுகள்
இது குறித்து மும்பை அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா கூறியதாவது: இந்த இடைவெளி தங்கள் அணிக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த நேரத்தில் தங்கள் அணியின் முன்னேற்றம் குறித்து சில முவுகளை எடுத்துள்ளோம்.இந்த இடைவேளை வீரர்களுக்கு உடல் அளவிலும், மனதளவிலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
வீரர்கள் ஓய்வு
மேலும் வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஓய்வெடுத்தனர். ரெய்னியர் ஃபெர்னாண்டஸ் மற்றும் மிலன் சிங் ஆகியோர் மிட்ஃபீல்ட் பகுதியில் களம் இறங்குவார்கள் என்றும் பாலோ மச்சோவும் இவர்களுடன் சேர்ந்து விளையாடுவார். கேரள பிளாஸ்டர்களுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் காயமடைந்த ஜெயன் லாரென்கோவின் தற்போது குணமடைந்துள்ளார் என்று ஜோர்டே கோஸ்டா கூறினார்.
தொடர் போட்டி
இதனிடையே பெங்களூரு எஃப்சி அணி இது வரை யாரும் வெல்ல முடியாத இடத்தில் உள்ளது. அந்த அணி 11 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இதகுறித்து பெங்களூரு அணியின் பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ரெட், கூறியதாவது:
பயிற்சியார் கணிப்பு
மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் நட்சத்திர வீரர் மிக்கு மீண்டும் முழு பலத்துடன் களம் இறங்குகிறார். ஆனால் மற்றொரு வீரரான நிஜுகுமார் இன்னும் காயத்தில் இருந்து மீளாததால் அவர் இடம் பெறவில்லை. எனவே போட்டி கடினமாகவும்,விறுவிறுப்பாகவும் இருக்கும் என்றும் கூறினார்.