கோவா : ஐஎஸ்எல் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் எஃப்சி கோவா - ஒடிசா எஃப்சி அணிகளுக்கிடையே மோதல் நடைபெற்றது. இதில் எஃப்சி கோவா அணி 3 - 0 என்ற கோல் ஒடிசா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
6 ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 44 ஆவது நாள் ஆட்டம் கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் எஃப்சி கோவா - ஒடிசா எஃப்சி அணிகள் இடையே நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஒடிசா எஃப்சி அணி வலது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. தொடக்கம் முதல் இரு அணிகளும் கடுமையாக மோதின. ஆட்டத்தின் 19 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் கோரா அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.
ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் கோவா அணியில் மாற்றம் செய்யப்பட்டது. ஆட்டத்தின் 43 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் டெல்காடோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து எஃப்சி கோவா அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 46 மற்றும் 50 ஆவது நிமிடங்களில் ஒடிசா அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. 65 ஆவது நிமிடத்தில் கோவா அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 67 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் கௌரவ் போராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
73 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் எடு பேடியாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 80 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் நாராயணுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
85 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் பிராண்டன் ஒரு கோல் அடித்து அசத்தினார். 88 ஆவது நிமிடத்தில் கோவா அணியில் மாற்றம் செய்யப்பட்டது. ஆட்டத்தின் 89 ஆவது நிமிடத்தல் கோவா அணியின் கோரா மீண்டும் ஒரு கோல் அடித்தார். 90 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் பிராண்டனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியில் எஃப்சி கோவா அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.