ஜாம்ஷெட்பூர் : ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி தனது சொந்த மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை எதிர்கொண்டுள்ளது. இந்த அணி பெங்களூரு எஃப்சி அணியை ஜேஆர்டி டாடா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
இரும்பு நகர அணி ஹீரோ ஐஎஸ்எல்லில் சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. ஒடிஷா எஃப்சி, ஹைதராபாத் எஃப்சி அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்த அணி வெற்றிபெற்றுள்ளது.
பயிற்சியாளர் அன்டோனியோ இரியோன்டோவின் அணி அதிரடி தாக்குதலில் சிறந்து விளங்குகிறது. இந்த அணியின் மையப்புள்ளியாக மிட்ஃபீல்டர் பிட்டி விளங்குகிறார். பெங்களூரு வுக்கு எதிரான போட்டிகளில் பிட்டி முக்கிய அம்சமாக விளங்குவார்.
"நடப்பு சாம்பியனுக்கு எதிராக ஆடுவது மிகப்பெரிய சவால். பெங்களூரு மிகச்சிறந்த அணி. புள்ளிகள் பட்டியலை வைத்து அவர்களை மதிப்பிடுவது தவறாக முடியும். அதே நேரம் அவர்களை வீழ்த்த முடியும் என நம்புகிறோம். எங்கள் அணி, எங்கள் யுக்திகளில் கவனம் செலுத்துவது அவசியம்" என்கிறார் இரியோன்டோ.
ஜாம்ஷெட்பூர் ஸ்ட்ரைக்கர் செர்ஜியோ கேஸ்டல் ஐஎஸ்எல்லில் புயலென நுழைந்துள்ளார். இவர் ஏற்கனவே 2 கோல் அடித்துள்ளார். அணியின் வெற்றியில் இவரது பங்கு பிரதானமாக இருக்கும்.
இந்த அணியில் உள்ள ஃபரூக் சவுத்ரி, அனிகேத் ஜாதவ், மோபஷிர் ரஹ்மான் ஆகிய இந்திய வீரர்களும் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். பெங்களூரு எஃப்சி அணி தன் முதல் இரு போட்டிகளில் ஒரு புள்ளியை மட்டுமே பெற்றுள்ளது.
"கோவாவுக்கு எதிரான முந்தைய போட்டியில் பல நேர்மறையான விஷயங்களை பெற்றுள்ளோம். எங்கள் வீரர்கள் விளையாண்ட விதம் மகிழ்ச்சி தருகிறது. கோரோவுக்கு சரியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. எங்கள் தற்காப்பு வீரர்கள் சிறப்பாக ஆடினர். நாங்கள் 4 புள்ளிகளை இழந்திருந்தாலும் மன ரீதியாக வலிமை பெற்றுள்ளோம். ஜாம்ஷெட்பூருக்கு எதிராக இந்த வலிமை வெளிப்படும்" என்கிறார் பெங்களூரு பயிற்சியாளர்.
பெங்களூருவுக்கு எதிராக ஜாம்ஷெட்பூரின் யுக்தி என்னவென்பது அதன் பயிற்சியாளர் இரியோன்டோவுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். கடந்த 2 ஆட்டங்களை பார்க்கும்போது அவர்கள் தற்காப்பு, தாக்குதல் என எந்த பாணியையும் எளிதாக கையாள்வார்கள் என்பது தெரிகிறது.
இரு வல்லவர்கள் வார இறுதியில் மோதும் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது