கோவா : இந்தியன் சூப்பர் லீக் தொடரில் பெங்களூரு எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் மோதும் போட்டிகு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
பெங்களூரு அணி இந்த சீசனில் இதுவரை தோல்வி அடையவில்லை. அதே சமயம், தான் ஆடிய போட்டிகள் அனைத்திலும் அந்த அணி வெற்றி பெறவும் இல்லை. சில போட்டிகள் டிரா ஆகி உள்ளன.
நான்கு போட்டிகளில் ஒரு வெற்றியும், மூன்று டிராவும் செய்துள்ளது பெங்களூரு அணி.
மறுபுறம் கேரளா அணி இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. அந்த அணி ஏடிகே மோகன் பகான், எஃப்சி கோவா அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்தது. சென்னையின் எஃப்சி மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணிகளுக்கு எதிராக டிரா செய்தது.
பெங்களூரு அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்கு முன்னேறும். கேரளா அணி வெற்றி பெற்றால் அது இந்த சீசனின் துவக்கமாக அமையும்.
கடைசியா அறிவிப்பு வந்தாச்சு... ஜனவரியில சையத் முஸ்தாக் அலி தொடர்... அறிவித்த பிசிசிஐ
பெங்களூரு அணி நல்ல வலுவான அணியாக உள்ளது. நிச்சயம் கேரளா அணியை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் தடுக்கும் ஆற்றல் அந்த அணியிடம் உள்ளது.
கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இதுவரை நடந்த போட்டிகளில் கோல் அடிக்க திணறி வருவதை கண்ட நிலையில், அந்த நிலையை மாற்றினால் மட்டுமே அந்த அணியால் வெற்றிகளை குவிக்க முடியும்.