கோவா : ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசனில் சென்னையின் எஃப்சி அணி, ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை எதிர்கொள்ள உள்ளது.
சென்னையின் எஃப்சி கடந்த சீசனில் முதல் பாதியில் மோசமாக செயல்பட்டு, பாதியில் பயிற்சியாளரை மாற்றியது. அதன் பின் சிறப்பாக செயல்பட்டு அந்த அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி ஏடிகே அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது.
இந்த சீசனில் புதிய பயிற்சியாளருடன் களம் காண உள்ளது அந்த அணி. புதிய வீரர்கள் பலரும் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஐஎஸ்எல் தொடரில் அதிக வெற்றி சதவீதம் பெற்ற அணிகளில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
சென்னையின் எஃப்சி அணி தான் ஆடிய 107 போட்டிகளில் 41 வெற்றிகளை பெற்றுள்ளது. மறுபுறம் ஜாம்ஷெட்பூர் அணி நான்கு சீசன்களில் ஆடி 54 போட்டிகளில் 17 வெற்றிகளை குவித்துள்ளது.
அதிக வெற்றி சதவீதம் கொண்ட அணிகளின் பட்டியலில் ஜாம்ஷெட்பூர் பத்தாம் இடத்தில் உள்ளது. இரண்டு சீசன்களில் அந்த அணி ஐந்தாம் இடம் பிடித்ததே அந்த அணியின் அதிகபட்ச முன்னேற்றம் ஆகும்.
ரோஹித், இஷாந்த் அதிரடி நீக்கம்.. சிக்கிய இந்திய அணி.. ஆஸி. தொடரில் பெரும் பின்னடைவு!
இந்த நிலையில், சென்னையின் எஃப்சி அணியை எப்படி வீழ்த்தப் போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னையின் எஃப்சி அணி இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்பதால் இந்த சீசனில் மீண்டும் சாம்பியன் பட்டத்தை நோக்கி குறி வைக்கும். கடந்த சீசனில் சென்னை அணியை இறுதி வரை அழைத்துச் சென்ற பயிற்சியாளர் ஓவன் கோயல் இந்த சீசனில் ஜாம்ஷெட்பூர் அணியின் பயிற்சியாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு கோவா திலக் மைதானத்தில் நடைபெற உள்ளது.