கோவா : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றில் சென்னையின் எஃப்சி - ஒடிசா எஃப்சி அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இரு அணிகளும் அதிக கோல் அடிக்கும் வாய்ப்புகளைக் கூட பெறாமல் மோசமாக சொதப்பின.
ஒடிசா மொத்தமே மூன்று ஷாட்களை மட்டுமே அடிக்க முயற்சி செய்தது. அதில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. மறுபுறம் சென்னை அணி இன்னும் மோசமாக செயல்பட்டது. 12 ஷாட்களை அடிக்க வாய்ப்பு இருந்தும் அதில் இரண்டு முறை மட்டுமே ஷாட் அடித்தது. அதிலும் கோல் அடிக்கவில்லை.
ஆனால், இந்தப் போட்டியில் சென்னை அணி வசமே பந்து அதிக நேரம் இருந்தது. ஆனாலும், அந்த அணி மோசமாக ஆடி வரும் ஒடிசா அணியை மீறி கோல் அடிக்காமல் தடுமாறியது.
முதல் பாதியில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதின. அப்போது இரண்டு சென்னை அணி வீரர்களுக்கு மஞ்சள் நிற அட்டை காண்பிக்கப்பட்டது.
பிரிஸ்பேன்ல 4வது டெஸ்ட் கண்டிப்பா நடக்கும்... கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதி
ஒடிசா அணியின் கோல் கீப்பரை பாராட்டியாக வேண்டும். அவர் சென்னை அணியின் கோல் வாய்ப்புகளை சாமர்த்தியமாக தடுத்தார்.
கடைசி 10 நிமிடங்கள் பந்து ஒடிசா அணி யின் பாதி இடத்திலேயே இருந்தது. சென்னை அணி கோல் அடிக்க போராடியதே இதற்கு காரணம். ஆனால், அப்போதும் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
ஆட்ட நேர இறுதியில் போட்டி 0 - 0 என கோல் அடிக்காமல் டிரா ஆனது. இந்த இரு அணிகளும் மீண்டும் புதன்கிழமை அன்று மோத உள்ளன.