கோவா : 2020-21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நவம்பர் 20 முதல் துவங்க உள்ளது.
முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஏடிகே மோகன் பகான் அணிகள் மோத உள்ளன.
கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. எப்போதும் கேரளாவில் ஐஎஸ்எல் போட்டிகள் நடந்தால் நிறைய ரசிகர்கள் கூடுவார்கள்.
ஆனால், இப்போது கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. அனைத்து போட்டிகளும் கோவாவில் மூடப்பட்ட மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கேரளா ரசிகர்களை ஈர்க்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஃபுட்பால் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் லிமிடெட் நிறுவனம் இணைந்து சில நிகழ்ச்சிகளை நடத்த உள்ளன.
9வது ஐபிஎல் டீம் எனக்குதான்.. பிசிசிஐயிடம் முட்டி மோதிய தென்னிந்திய சூப்பர் ஸ்டார்.. பரபர தகவல்!
இதன் மூலம் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி மீதான தங்கள் அன்பை, ஆர்வத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.