கோவா : இந்தியன் சூப்பர் லீக் ஏழாவது சீசன் துவங்க உள்ளது. முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஏடிகே மோகன் பகான் அணிகள் மோத உள்ளன.
கொல்கத்தாவை மையமாக கொண்ட ஏடிகே அணி, இந்த சீசனில் பழமை வாய்ந்தா மோகன் பகான் கால்பந்து கிளப் அணியுடன் இணைந்து தன் முதல் ஐஎஸ்எல் சீசனை சந்திக்க உள்ளது.
அதனால் ஏடிகே மோகன் பகான் அணி மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அந்த இரண்டு கிளப் அணிகளின் ரசிகர்களும் ஒன்றிணைய உள்ளதால் அந்த அணி அதிக ரசிகர்கள் கொண்ட அணியாக மாறி உள்ளது.
மேலும், கடந்த சீசனில் கோப்பை வென்ற அணி என்பதாலும் ஏடிகே அணியின் முதல் போட்டியிலேயே எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
மறுபுறம் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி நிலையான ரசிகர்களை கொண்டு இருந்தாலும் கடந்த சீசன்களில் தொடர்ந்து தோல்வி அடைந்தது. 2019-20 சீசனில் அந்த அணி புள்ளிப் பட்டியலில் கீழே தான் இடம் பிடித்தது.
வெத்தலையில் மை போட்டா பார்க்க முடியும்.. இந்தியா - ஆஸி. டெஸ்ட்.. ஒரே வார்த்தையில் சங்கு ஊதிய ஆபிசர்!
இந்த இரண்டு அணிகளும் புதிய வீரர்களுடன் 2020-21 சீசனை எதிர்கொள்ள உள்ளன. முதல் போட்டியிலேயே கேரளா அணி பல புதிய வீரர்களை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சீசன்களின் மோசமான தோல்விகளால் எழுந்த விமர்சனத்தை முதல் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் கேரளா அணியால் உடைக்க முடியும். அது இந்த சீசனையே அந்த அணிக்கு மாற்றி அமைக்கும். அதே சமயம், ஏடிகே அணி மோகன் பகான் எனும் பாரம்பரிய பெயரை சுமந்து ஆட உள்ளதால் அத்தனை எளிதில் விட்டுக் கொடுக்காது.