கோவா : எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி தன் முதல் சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
தன் எட்டாவது போட்டியில் தான் அந்த அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றி ஈஸ்ட் பெங்காலை விட மோசமாக ஆடி வரும் ஒடிசா எஃப்சி அணிக்கு எதிராக கிடைத்தது.
2020-21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் அறிமுகம் ஆனது எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி. தன் முதல் சீசனில் ஆடும் அந்த அணி துவக்கம் முதலே மோசமான தோல்விகளை பெற்று வந்தது.
இந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது ஈஸ்ட் பெங்கால் அணி. ஒடிசா அணியும் ஒரு வெற்றி கூட பெறாமல் மோசமாக ஆடி வந்தது.
இந்த இரு அணிகளும் மோதிய லீக் போட்டி கோவாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மூன்று கோல் அடித்து மிரட்டியது. முதல் பாதியில் 12 மற்றும் 39வது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்து 2 - 0 என முன்னிலை வகித்தது ஈஸ்ட் பெங்கால்.
ஐஎஸ்எல்.. அடுத்தடுத்து 2 கோல்.. வெற்றிபெறும் வாய்ப்பு பறிபோனது.. சென்னை - ஈஸ்ட் பெங்கால் ஆட்டம் டிரா
அதன் பின் ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் பரபரப்பு கூடியது. 88வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் மூன்றாவது கோலை அடித்தது. ஒடிசா அணி 90வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆறுதல் அடைந்தது.
போட்டியில் 3 - 1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் புள்ளிப் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி 10வது இடத்தை பிடித்துள்ளது ஈஸ்ட் பெங்கால். ஒடிசா கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.