கோவா : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி தன் முதல் போட்டியில் ஆடியது.
இந்தப் போட்டியில் ஏடிகே மோகன் பகான் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் ஏடிகே அணியின் ராய் கிருஷ்ணா 49வது நிமிடத்திலும், மன்விர் சிங் 85 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
ஈஸ்ட் பெங்கால் அணிக்கு தற்காப்பு வியூகம் வகுத்தார் பௌலர். 4-3-2-1 என்ற வியூகத்தை அவர் வகுத்தார். ஒரே ஒரு ஸ்ட்ரைக்கர் மட்டுமே இடம் பெற்றார். பல்வந்த் சிங் ஸ்ட்ரைக்கராக கிடைத்த ஓரிரு வாய்ப்புகளையும் வீணாக்கினார்.
முதல் போட்டியில் ஏடிகே மோகன் பகான் அணியை சந்தித்தது ஈஸ்ட் பெங்கால் அணி. இந்தப் போட்டியில் ஏடிகே அணி துவக்கத்தில் நிதான ஆட்டம் ஆடி பின் ஆதிக்கம் செலுத்தியது.
ஈஸ்ட் பெங்கால் அணிக்கு தற்காப்பு வியூகம் வகுத்தார் பௌலர். 4-3-2-1 என்ற வியூகத்தை அவர் வகுத்தார். ஒரே ஒரு ஸ்ட்ரைக்கர் மட்டுமே இடம் பெற்றார். பல்வந்த் சிங் ஸ்ட்ரைக்கராக கிடைத்த ஓரிரு வாய்ப்புகளையும் வீணாக்கினார்.
ஏடிகே அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்று தொடரில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளதோடு, எதிரணிக்கு ஒரு கோல் கூட விட்டுக் கொடுக்கவில்லை.