மலேரியா
கோடக்பாவுக்கு மலேரியா தாக்கியது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கோடக்பா மரணமடைந்தார். அவரது மரணம் டோகா கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது கொரோனாவைரஸ் காரணமாக டோகோவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறாமல் இருந்து வருகிறது. இதனால் கால்பந்துப் போட்டிகளும் நடைபெறவில்லை.
சொந்த ஊருக்குப் போனார்
கால்பந்துப் போட்டிகள் நடக்காத காரணத்தால் தான் வசித்து வரும் காரா நகரை விட்டு வெளியேறி தனது உறவினர்கள் தங்கியுள்ள டெவில் நகருக்குப் போயிருந்தார் கோடக்பா. இது தலைநகர் லோமேவுக்கு அருகில் உள்ளது. அங்கு வைத்துத்தான் அவருக்கு மலேரியா தாக்கியது. சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்த செய்தியை ஏஎஸ்சி காரா அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. மிகச் சிறந்த எதிர்காலம் அவருக்கு இருந்தது என்று அணி நிர்வாகம் கூறியுள்ளது.
பாதியில் கலைந்த கனவு
மீண்டும் கால்பந்து ஆட ஆர்வமாக இருந்தார். எப்போது விளையாடுவோம் என்று காத்திருந்தார். ஆனால் அவரது கனவுகள் நிராசையாகி விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார் அணி மேலாளர் ஜீன் மாரி எலோ. கோடக்பாவுக்கு ஏற்கனவே இருதயக் கோளாறும் இருந்ததாக தெரிகிறது. இதனால்தான் அவருக்கு சமீபத்தில் வந்த துனீஷியாவின் கிளப் யுஎஸ் டாட்டோயின் அணியில் விளையாடும் வாய்ப்பு தட்டிப் போய் விட்டது.
நண்பர்கள் சோகம்
இருப்பினும் காரா அணி நிர்வாகம் இவருக்கு உரிய சிகிச்சை தருவதை உறுதி செய்திருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மலேரியாவுக்கு அவர் பலியாகி விட்டார். இந்த இளம் வயதில் கோடக்பா இறந்தது அந்த நாட்டு கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஒரு மிகச் சிறந்த வீரர். இவ்வளவு விரைவில் அவர் போவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று அவரது நண்பர் கோபி குயலி கூறியுள்ளார்.