பெங்களுரு: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் அரை இறுதிக்கு நுழையும் கேரளா பிளாஸ்டர்ஸ் கனவை, பெங்களூரு எப்சி தகர்த்தது. கடைசி லீக் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு வென்றது.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் தற்போது அரை இறுதியை எட்டியுள்ளது. பெங்களூரு எப்சி, எப்சி புனே சிட்டி, சென்னையின் எப்சி அணிகள் ஏற்கனவே அரை இறுதிக்கு நுழைந்து விட்டன.