பியுனோஸ் ஐரெஸ்: கால்பந்தாட்ட ஜாம்பவானான அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்சி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அர்ஜென்டினா அணிக்காக 112 போட்டிகளில் ஆடியுள்ள மெஸ்சி, 55 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற கோபா அமெரிக்கா கோப்பைக்கான இறுதி போட்டியில் சிலி அணியிடம் அர்ஜென்டினா தோற்ற நிலையில், மெஸ்சி இன்று ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
நேற்றைய போட்டியில் பெனால்டி ஷூட் வாய்ப்பை மெஸ்சி தவற விட்டது அர்ஜென்டினா தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது. இந்த விரக்தியில் இருந்த மெஸ்சி ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இதனால் கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Lionel #Messi quits international football after Copa loss https://t.co/0ovaxRrTFf pic.twitter.com/WLIsYEMgjS
— Oneindia Tamil (@thatsTamil) June 27, 2016