யூரோ தொல்வி
இந்த 3 போட்டிகளிலும் சேர்த்து இங்கிலாந்து அணி மொத்தமாக 9 கோல்களை அடித்துள்ளது. அதில் 7 கோல்களை கறுப்பின வீரர்களால் அடிக்கப்பட்டுள்ளது. கறுப்பின வீரர்கள் என்று குறிப்பிடுவதற்கான காரணம், சரியான ஒரு ஆண்டுக்கு முன் இங்கிலாந்து அணி யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் இத்தாலி அணியிடம் பெனால்டி முறையில் தோல்வியை சந்தித்தது.
இனவெறி தாக்குதல்
இங்கிலாந்து அணிக்காக பெனால்டியை அடித்த ராஷ்போர்ட், புகாயா சாகா, ஜோசன் சான்சோ ஆகியோரால் பெனால்டி வாய்ப்பில் கோல் அடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து ரசிகர்கள் இவர்கள் மூவரையும் குறிவைத்து இன ரீதியாக விமர்சிக்க தொடங்கினர். சமூக வலைதளங்கள், மைதானங்கள், பொதுவெளிகள் என எங்கு பார்த்தாலும், மூவரையும் ரசிகர்கள் இன ரீதியில் விமர்சிப்பது தீவிரமடைந்தது.
சாகா பதிவு
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து சாகா தனது சமூக வலைதள பக்கத்தில், இன ரீதியாக பதிவிடப்படும் தாக்குதல்கள், என்னை பாதிக்க விடமாட்டேன். நான், மார்கஸ் ராஷ்போர்ட், ஜோடன் ஆகியோர் மீதான வெறுக்கத்தக்க விமர்சனங்களை வேறு எந்த இளைஞரும், குழந்தையும் பெறுவதை விரும்பவில்லை என்று பதிவிட்டார்.
மீண்டு வந்த ராஷ்போர்ட்
இந்த நிலையில் ரசிகர்களின் இனவெறி தாக்குதல்களை கடந்து உலகக்கோப்பைத் தொடரில் மீண்டும் சாகா மற்றும் ராஷ்போர்ட் ஆகியோர் மீண்டும் இங்கிலாந்து அணிக்காக மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இங்கிலாந்து அணி செனகல் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் வெற்றிபெற்றால், காலிறுதியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.