110வது போட்டி
ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 110வது மற்றும் லீக் போட்டிகளின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தொடரின் முதல் இரண்டு இடங்களில் வலிமையாக இருந்த ஏடிகே மோஹுன் பகன் மற்றும் மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதின.
மும்பை சிட்டி வெற்றி
முதல் இடத்தை பிடிக்கும் இந்த போட்டியில் இரு அணிகளும் கடுமையாக மோதின. ஆயினும் இந்த போட்டியில் 2க்கு 0 என்ற கணக்கில் மும்பை சிட்டி அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து ஐஎஸ்எல் லீக் வின்னர்ஸ் ஷீல்டை கைப்பற்றியுள்ளது. மேலும் ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக்கின் குரூப் ஸ்டேஜிலும் இடம்பெற்றுள்ளது.
அடுத்தடுத்த கோல்கள்
இந்த போட்டியில் கோல் அடிக்க கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் கோச் செர்ஜியோ லோபெரா தலைமையிலான மும்பை சிட்டி அணி சிறப்பாக பயன்படுத்தியது. 7வது மற்றும் 39வது நிமிடங்களில் அந்த அணியின் மோர்டடா பால் மற்றும் பார்த்தோலோமியோ ஆக்பெச் ஆகியோர் அடித்த கோல்கள் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது.
சிறப்பான தடுப்பாட்டம்
மேலும் இரண்டாவது பகுதியிலும் மோஹுன் பகன் அணியின் கோல் அடிக்கும் முயற்சியை சிறப்பாக தடுத்து ஆடியது மும்பை சிட்டி. இந்த இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், மோஹுன் பகன் அணி தொடரை கைப்பற்றி ஐஎஸ்எல் தொடரில் தனது இரண்டாவது கோப்பையை கைப்பற்ற தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.