48வது போட்டி
ஐபிஎல் 2020 -21 தொடரின் நேற்றைய 48வது போட்டி படோர்டா மைதானத்தில் மும்பை சிட்டி மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மும்பை சிட்டி அணி 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
அடுத்தடுத்த 3 கோல்கள்
இதையடுத்து ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலிலும் மீண்டும் முதலிடத்தில் சென்று பச்சக் என்று அமர்ந்துக் கொண்டுள்ளது மும்பை சிட்டி அணி. அந்த அணியின் மோர்டாடா ஃபால், பிபின் சிங், பார்த்தோலோமியோ ஆக்பெச் ஆகியோர் அடுத்தடுத்த கோல்களின் மூலம் தங்களது அணியின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்தனர்.
வெற்றியை தவறவிட்ட பெங்களூரு
நேற்றைய போட்டியில் பெங்களூரு அணியின் கோச் செர்ஜியோ லோபெரா அணியில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருந்தார். எரிக் பார்த்தாலுவிற்கு பதிலாக தேஷார்ன் ப்ரவுனை களமிறக்கினார். ஆயினும் அந்த அணியின் ஒரு கோல் வெற்றிக்கு போதுமானதாக இல்லை.
மும்பை சிட்டி அபாரம்
ஆனால் முதல் 9 நிமிடங்களிலேயே மும்பை சிட்டி தனது வெற்றிப்பயணத்தை துவக்கியது. முதல் கோலை அணியின் மோர்டாடா ஃபால் அடித்த நிலையில், அதன் நேற்றைய வெற்றிப்பயணம் துவங்கி, அடுத்தடுத்து 3 கோல்களை அணி வீரர்கள் சாத்தியமாக்கினர். மேலும் அணியின் கீப்பரும் தனது பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை அளித்தார்.