ஸ்டாக்ஹோல்ம் : ரசிகர்கள் இல்லாத மைதானம் கோமாளிகள் இல்லாத சர்க்கஸ் மற்றும் பூக்கள் இல்லாத தோட்டம் போன்றது என்று பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
ஸ்வீடனுக்கு எதிராக மோதிய தேசிய லீக் தொடரில் தனது 100 கோலை அடித்து சாதனை படைத்துள்ளார் ரொனால்டோ.
முன்னாள் ஈரான் கால்பந்தாட்ட வீரர் அலி டாய் 109 கோல்களை அடித்துள்ள நிலையில், தற்போது 100 கோல்களை கடந்துள்ள இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரொனால்டோ தட்டி சென்றுள்ளார்.
ஸ்வீடனுக்கு எதிராக மோதிய தேசிய லீக் தொடரில் தன்னுடைய 100 கோலை அடித்து இந்த சாதனையை புரிந்துள்ள இரண்டாவது வீரர் என்ற சிறப்பை போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார். முன்னதாக இந்த சாதனையை முன்னாள் ஈரான் கால்பந்தாட்ட வீரர் அலி டாய் 109 கோல்களுடன் புரிந்துள்ளார்.
டி20 தரவரிசை பட்டியல் வெளியீடு... பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து வீரர் முன்னேற்றம்
இந்நிலையில் ரசிகர்கள் இல்லாத மைதானங்கள் கோமாளிகள் இல்லாத சர்க்கஸ் மற்றும் பூக்கள் இல்லாத தோட்டம் போன்றது என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார். ஒரு விளையாட்டு வீரராக இதை தாங்கள் விரும்பவில்லை என்றாலும் ஆரோக்கியம் குறித்து நாம் கவனம் கொள்ள வேண்டியுள்ளதால் இதை ஏற்க வேண்டியுள்ளதாகவும் சில மாதங்களில் இந்த நிலை மாறும் என்றும் அவர் கூறியுள்ளார்.