குரூப் பிரிவுகள்
குரூப் ஏ வில் இந்தியா, சீனா, சீனா தைபே மற்றும் ஈரான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி காலிறுதிக்கு முன்னேறும். ஒவ்வொரு பிரிவிலும் 3வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தனியாக போட்டி நடத்தப்பட்டு, அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணியும் காலிறுதிக்கு செல்லும்.
நேருக்கு நேர்
இந்த தொடரில் முதல் 5 இடங்களை பிடிக்கும் அணி உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டிக்கு தகுதி பெறும் . முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், ஈரான் மகளிர் அணிகளும் மோத உள்ளன. இந்திய மகளிர் அணி கால்பந்து தரவரிசை பட்டியலில் 55வது இடத்தில் உள்ளது. ஈரான் அணி 70வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் இதுவரை 3 முறை மோதியுள்ளன. இதில் இந்திய அணி 2 முறையும், ஈரான் ஒரு முறையும் வென்றுள்ளது.
தமிழக வீராங்கனைகள்
இந்திய மகளிர் அணியில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த தொடரில் தமிழகத்தை சேர்ந்த இந்துமதி கதிரேசன், சந்தியா ரங்கநாதன், மாரியம்மாள் பாலமுருகன், சௌமியா நாராயணசாமி மற்றும் கார்த்திகா அங்கமுத்து ஆகிய 5 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்
நம்பிக்கை
அதிகபட்சமாக 8 மணிப்பூர் வீராங்கனைகள், 5 தமிழக வீராங்கனைகள், 3 ஹரியானா வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். ஈரான் அணி தகுதி சுற்றில் ஜார்டன், வங்கதேசம்.,அணியை வீழ்த்தி நல்ல உத்வேகத்துடன் உள்ளது. இந்திய மகளிர் அணி, அண்மையில் பிரேசில் அணியை எதிர்கொண்ட உத்வேகத்துடனும், அனுபவத்துடனும் உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என்று கேப்டன் அசதலத்தா தேவி தெரிவித்துள்ளார். இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை ஜியோ டிவியில் காணலாம்.