கிரிக்கெட் பிம்பம் கோஹ்லி
விராட் கோஹ்லிதான் இந்தியாவிலேயே அதிக உடற்தகுதி உடைய இந்தியாவின் விளையாட்டு வீரர் என்ற பிம்பம் சில நாட்கள் முன்பு ஏற்படுத்தப்பட்டது. அதற்கு காரணம், கிரிக்கெட் என்ற பிரபலமான விளையாட்டும், அதில் புதிதாக புகுத்தப்பட்ட யோ-யோ எனப்படும் உடற்தகுதி தேர்வும் தான்.
கண்ணை மறைக்கும் கிரிக்கெட்
அந்த யோ-யோ தேர்வில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் தடுமாற, கோஹ்லி 19 புள்ளிகள் பெற்று யோ-யோ தேர்வில் அதிக தூரம் ஓடியவர் என்ற பெயரையும் பெற்றார். எனினும், இது கிரிக்கெட் வீரர்களுக்குள் மட்டும் தான். இந்த செய்தி பரவியதை அடுத்து, கோஹ்லி இந்தியாவின் உடற்தகுதிக்கான தூதுவர் போல பார்க்கப்பட்டார். இந்திய பிரதமருக்குக் கூட உடற்தகுதி சவால் விடுத்தார்.
கோஹ்லியை முந்திய சர்தார்
ஆனால், அதிகம் வெளியே தெரியாத ஹாக்கி வீரரும், முன்னாள் கேப்டனுமான சர்தார் சிங் அதே யோ-யோ தேர்வில் 21.4 புள்ளிகள் பெற்று இருக்கிறார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஏற்கனவே அவர் 21.3 புள்ளிகள் பெற்றவர். தற்போது தன் மதிபீட்டை, தானே முறியடித்துள்ளார். கூடுதல் செய்தி, இவருக்கு 32 வயது ஆகிறது. இவர் தான், சென்ற ஏசியன் கேம்ஸில் இந்தியா தங்கம் வெல்லும் போது கேப்டனாக இருந்தவர்.
ஹாக்கியையும் கவனிப்போம்
ஹாக்கி வீரர்களும் வயது வித்தியாசம் பார்க்காமல் கடுமையாக உழைத்து வருகிறார்கள். குறைந்தபட்சம் அவர்கள் கோல் அடிக்கும் போதும், வெற்றிகளைப் பெறும் போதும் உற்சாகப்படுத்தினால் மட்டும் போதும். அது அவர்களை பல மடங்கு அதிகம் உழைக்கச் செய்யும்.