பெங்களூரு : புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் இன்று முதல் பெங்களூருவில் தொடங்குகிறது. வரும் டிசம்பர் மாதம் வரை இந்த தொடர் நடைபெறுகிறது.
இந்த தொடர் தற்போது இரண்டு பாதியாக நடைபெற உள்ளது. முதல் பாதியில் 66 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதற்கான அட்டவணை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தலைவாஸ்,பெங்களூரு புல்ஸ், டாபாங் டெல்லி, தெலுங்கு டைட்டன்ஸ், பாட்னா பைரட்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன.
இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டாபாங் டெல்லி அணி மும்பா அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 8.30 மணிக்கு பெங்களூரு புல்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இரவு 9.30 மணிக்கு ஜெய்ப்பூர் மற்றும் யுபி அணிகள் விளையாடுகின்றன. தமிழ் தலைவாஸ் நாளைய தனது முதல் ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது. பெங்களூரு அணியின் முக்கிய நட்சத்தி வீரர் செராவத் இந்த ஆண்டு முதல் தமிழ் தலைவாஸ் அணிக்காக விளையாடுகிறார்.
கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்காக 304 ரைடு புள்ளிகள் பெற்ற செரவாத், ஏலத்தில் 2 கோடி ரூபாய் மேல் சென்று, அதிக விலைக்கு போன வீரர் என்ற பெயரை பெற்றார். எனினும் மற்ற வீரர்கள் எல்லாம் அவ்வளவு அனுபவம் இல்லை.