சென்னை : புரோ கபடி லீகில் அக்டோபர் 11 அன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.
ஆட்டத்தின் துவக்கத்தில் தமிழ் தலைவாஸ் நன்றாக செயல்பட்டது. எனினும், முதல் பாதியில் 18-15 என முன்னிலையில் இருந்தது பெங்கால் வாரியர்ஸ்.
இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய பெங்கால் அணி 36-27 என போட்டியை வென்றது. தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து நான்கு போட்டிகளை இழந்துள்ளது. முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ்.
நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில், பாட்னா பைரேட்ஸ், யுபி யுத்தா அணிகள் மோதின. அந்த போட்டியில் இரு அணிகளும் மிக நெருக்கமாக புள்ளிகளை பெற்று வந்ததால், சுவாரஸ்யமாக அமைந்தது.
ஆட்டத்தின் முதல் பாதியில் பாட்னா பைரேட்ஸ் 21-20 என 1 புள்ளி வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது. இறுதியில் பாட்னா பைரேட்ஸ் அணி 43-41 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. யுபி யுத்தா அணி கடுமையாக போராடியும் தோல்வி அடைந்தது.