கொல்கத்தா : பெங்கால் வாரியர்ஸ் - பெங்களூரு புல்ஸ் இடையே ஆன புரோ கபடி லீக் போட்டியில் அனல் பறந்தது.
இரு அணியிலும் இருந்த நட்சத்திர வீரர்கள் ரெய்டுகளில் புள்ளிகளை அள்ளிக் கொண்டே செல்ல போட்டியில் கடைசி நேரம் வரை பரபரப்பு நீடித்தது.
இறுதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 42 - 40 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்கால் அணியின் மணிந்தர் சிங் 17 ரெய்டு புள்ளிகள் அள்ளினார். பதிலுக்கு பெங்களூரு அணியின் நட்சத்திர ரெய்டர் பவன் செஹ்ராவத் 19 புள்ளிகள் எடுத்தார்.
PKL 2019 : கேப்டன் அசத்தல் ஆட்டம்.. ஜெய்ப்பூர் அணியை அடித்து வீழ்த்தியது பாட்னா!
பெங்களூரு அணி ரெய்டுகளில் அபாரமாக ஆடினாலும், தடுப்பாட்டத்தில் கோட்டை விட்டது. அது தான் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.
இந்தப் போட்டியின் முதல் பாதியின் முடிவில் பெங்கால் அணி 15 - 14 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில் இரு அணிகளுக்கும் வாய்ப்பு இருந்தது. இரு அணிகளுமே போராடின.
இறுதி நேரத்தில் பெங்கால் அணியின் மணிந்தர் சிங் அசத்தலாக செயல்பட்டு தன் அணியை இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
பெங்கால் வாரியர்ஸ் அணி 42 - 40 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.