ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையே ஆன கபடிப் போட்டி டையில் முடிந்தது.
இரு அணிகளும் தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தியதை அடுத்து, போட்டி டையில் முடிந்தது.
ஜெய்ப்பூர் அணி எப்போதுமே தடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கி வருகிறது. அந்த அணிக்கு ஓரளவு ஈடாக குஜராத் அணியும் தடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டது.
ஒரு வகையில், இரு அணிகளுமே ரெய்டுகளில் சறுக்கியது என்பது தான் உண்மை. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் போட்டியில் பெரும்பாலான நேரங்களில் முன்னிலையில் இருந்தது. எனினும், கடைசி நேரத்தில் இரு அணிகளும் மாற்றி, மாற்றி புள்ளிகள் எடுத்து போட்டியை டை செய்தன.
முதல் பாதி முடிவில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 20 - 15 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில் குஜராத் அணி அதிரடியாக ஆடி முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரு அணிகளும் மாற்றி, மாற்றி முன்னிலை பெற்று வந்தன.
ஜெய்ப்பூர் அணியின் நிதின் ராவல், கடைசி ரெய்டு சென்றார். அப்போது அவர் அவுட் ஆகாமல் இருந்து இருந்தால் அந்த அணி வெற்றி பெற்று இருக்கலாம். எனினும், அவரை டேக்கில் செய்த குஜராத் அணி போட்டியை 28 - 28 என்ற புள்ளிக் கணக்கில் டை செய்தது.
இந்தப் போட்டியில் ஜெய்ப்பூர் அணி 6 ரெய்டு புள்ளிகளும், குஜராத் 9 ரெய்டு புள்ளிகளும் மட்டுமே எடுத்தன.