டெல்லி : தெலுகு டைட்டன்ஸ் அணி அபாரமாக ஆடி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
2019 புரோ கபடி லீக் போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், ஒன்பதாவது இடத்தில் இருந்த தெலுகு டைட்டன்ஸ் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் இரு அணிகளின் ரெய்டர்களும் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. தடுப்பாட்ட வீரர்களே போட்டியில் ஆதிக்கம் செலுத்தினர்.
தெலுகு டைட்டன்ஸ் அணியின் விஷால் பரத்வாஜ் 8 டேக்கில் புள்ளிகள் பெற்று அசத்தினார். ஜெய்ப்பூர் அணியின் தடுப்பாட்டமும் சிறப்பாக இருந்தது.
முதல் பாதியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 14 - 11 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில் தெலுகு டைட்டன்ஸ் அணியின் விஷால் பரத்வாஜ் ஜெய்ப்பூர் அணிக்கு இணையாக டேக்கில் செய்தார்.
கடைசி ஒரு நிமிடம் இருக்கும் போது தெலுகு டைட்டன்ஸ் அணி 22 - 21 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது. அப்போது எந்த அணி வெற்றி பெரும் பெறும் என்ற பரபரப்பு இருந்தது.
அப்போது சிறப்பாக செயல்பட்ட தெலுகு டைட்டன்ஸ் அணி மேலும் இரு புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது.
முதல் இடத்தில் இருக்கும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 24 - 21 என்ற புள்ளிக் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.