புனே : புனேரி பல்தான் அணியின் பங்கஜ் மோஹிதே அசத்தல் ரெய்டுகள் செய்ய, அந்த அணி 42 - 38 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் புனேரி பல்தான் அணி தடுப்பாட்டம், ரெய்டு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டது. பெங்களூரு புல்ஸ் அணி ரெய்டுகளில் மட்டுமே கவனம் செலுத்தியது.
புனேரி அணியை விட 11 ரெய்டு புள்ளிகள் அதிகம் எடுத்தது பெங்களூரு. எனினும், தடுப்பாட்டம் சுமாராக இருந்ததை அடுத்து, 4 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் முதல் பாதியில் புனேரி அணி 20 - 15 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் பெங்களூரு அணியின் பவன் செஹ்ராவத் மற்றும் ரோஹித் குமார் ரெய்டுகளில் ஆதிக்கம் செலுத்தினர்.
PKL 2019 : கடைசி நிமிடம்.. பம்மிப் பதுங்கி ஆடி போட்டியை டை செய்த இரு அணிகள்!
எனினும், புனேரி அணி சமாளித்து 42 - 38 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. புனேரி அணியின் பங்கஜ் மோஹிதே 17 ரெய்டு புள்ளிகள் எடுத்தார். அந்த அணியின் சுர்ஜீத் சிங், சாகர் கிருஷ்ணா தடுப்பாட்டத்தில் 5 டேக்கில் புள்ளிகளுக்கும் மேல் எடுத்தனர்.
இந்தப் போட்டியுடன் புனே பிரிவு லீக் போட்டிகள் நிறைவு அடைந்தன. அடுத்த கட்டப் போட்டிகள் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.