பெங்களூரு : யு மும்பா - புனேரி பல்தான் அணிகள் மோதிய புரோ கபடி லீக் போட்டி டையில் முடிந்தது.
இந்தப் போட்டியில் இரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்தில் ஆதிக்கம் செலுத்தின. இரண்டு அணிகளும் சம நிலையில், சம பலத்தில் மோதின. அதுவே போட்டி டை ஆக முக்கிய காரணம்.
யு மும்பா அணியின் அபிஷேக் சிங் கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு புனேரி பல்தான் வெற்றியை தடுத்தார். மேலும், 11 ரெய்டு புள்ளிகள் எடுத்து அசத்தினார்.
பெரிய சாதனையை நோக்கி முன்னேறிய செரீனா.. அமெரிக்க ஓபன் அரையிறுதியில் அசத்தல் வெற்றி!
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளின் தடுப்பாட்டமும் சிறப்பாக இருந்தது. நிதின் டோமர் தன் முதல் ரெய்டிலேயே டேக்கில் செய்யப்பட்டு, வெளியே அமர வைக்கப்பட்டார். அந்த அளவுக்கு ரெய்டர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
முதல் பாதியில் புனேரி பல்தான் அணி ஆல் அவுட் ஆனது. யு மும்பா அணி 16 - 12 என்ற அளவில் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியின் துவக்கத்தில் யு மும்பா அணியை புரட்டி எடுத்து ஆல் அவுட் செய்தது புனேரி.
இரு அணிகளும் 20 - 20 என்ற சம நிலையை எட்டின. தொடர்ந்து மிரட்டிய புனேரி ஆறு புள்ளிகள் முன்னிலை பெற்று ஆடி வந்தது. அந்த அணிக்கு தான வெற்றி வாய்ப்பு அதிகம் என எண்ணிய போது, யு மும்பா அணியின் அபிஷேக் சிங் தன் அதிரடி ரெய்டுகளால் வேகமாக புள்ளிகளை பெற்றார்.
கடைசி நகர்விலும் கூட ஒரு புள்ளி எடுத்த யு மும்பா, புனேரி பல்தான் வெற்றியை தட்டிப் பறித்து டை செய்தது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 33 - 33 என்ற புள்ளிக் கணக்கில் இருந்தன.