புனே : டபாங் டெல்லி அணியின் நவீன் குமார் மீண்டும் அசத்தல் ரெய்டுகள் செய்ததால் அந்த அணி எளிதாக தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
புனேவில் நடைபெற்ற புரோ கபடி லீக் சுற்றுப் போட்டியில் டபாங் டெல்லி - தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் இரு அணிகளை சேர்ந்த நட்சத்திர ரெய்டர்கள் முக்கியத்துவம் பெற்றனர். எனினும், கடந்த 13 போட்டிகளாக ஒவ்வொரு போட்டியிலும் பத்துக்கும் மேற்பட்ட ரெய்டு புள்ளிகளை அள்ளி வரும் நவீன் குமார், 14வது முறையாக மீண்டும் பத்துக்கும் மேற்பட்ட புள்ளிகளை அள்ளினார்.
PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி!
அவரது அதிரடி மற்றும் திட்டங்களால் தெலுகு அணியை இரண்டு முறை ஆல் - அவுட் செய்தது டெல்லி. தெலுகு அணியால் டெல்லி அணியை ஒரு முறை கூட ஆல் அவுட் செய்யவில்லை. அதுவே அந்த அணியின் தோல்விக்கும் முக்கிய காரணமாக இருந்தது.3
இந்தப் போட்டியின் முதல் பாதியில் 18 - 15 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில் வேகத்தை கூட்டிய டெல்லி அணி பிரித்து மேய்ந்தது. ஒரு கட்டத்தில் 11 புள்ளிகள் முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்தியது.
ஆட்ட நேர இறுதியில் டெல்லி அணி 37 - 29 என்ற புள்ளிக் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.