பெங்களூரு : யுபி யுத்தா அணி, வலுவான பெங்கால் வாரியர்ஸ் அணியை அதிக டேக்கில் புள்ளிகள் பெற்று வீழ்த்தியது.
2019 புரோ கபடி லீக்கில் நடைபெற்ற 69வது லீக் போட்டியில் யுபி யுத்தா - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இரு அணிகளும் மிகவும் நெருக்கமாக ரன் குவித்து வந்ததால் கடைசி வரை பரபரப்பு நீடித்தது.
யுபி யுத்தா அணியின் ஸ்ரீகாந்த் ஜாதவ் 9 ரெய்டு புள்ளிகளும், நிதிஷ் குமார் 7 டேக்கில் புள்ளிகளும் பெற்று அசத்தினர். இறுதியில் யுபி யுத்தா அணி 32 - 29 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடர்..!! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. இளம் வீரரை கேப்டனாக நியமித்த இந்திய அணி
முதல் பாதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி போட்டியை துவக்கியது. எனினும், பின்னே துரத்தி வந்த யுபி யுத்தா அணி டேக்கில் செய்வதில் சிறந்து விளங்கியது. முதல் பாதியின் முடிவில் பெங்கால் வாரியர்ஸ் 12 - 13 என்ற புள்ளிக் கணக்கில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் துவக்கத்திலேயே பெங்காலை ஆல் அவுட் செய்தது யுபி. ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 25 - 24 என்ற நிலையில் முட்டிக் கொண்டு நின்றனர். கடைசி மூன்று நிமிடங்கள் இருக்கும் போது யுபி யுத்தா 29 - 26 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது.
அதை அப்படியே இறுதி நிமிடங்களில் தக்க வைத்த யுபி அணி, ஆட்ட நேர முடிவில் 32 - 29 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.