இன்னிக்கு ஜெயிச்சு அடுத்த சுற்றுக்கு
வந்துட்டாங்கய்யா, வந்துட்டாங்க. இன்னிக்கு ஜெயிச்சு, அடுத்தச் சுற்றுக்கு முன்னேறிவிடலாம் என்று தயாராக இருந்த யு மும்பா அணியை 38-35 என்ற புள்ளிக் கணக்கி்ல தமிழ் தலைவாஸ் வென்றது. இதன் மூலம் யு மும்பாவுக்கு அடுத்த சுற்றுக்கு நுழையும் வாய்ப்பு `வடை போச்சே'தான்.
துவக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடிய யு மும்பா
துவக்கத்தில் இருந்தே, யு மும்பா சிறப்பாக விளையாடியது. முதல் பாதியில் 18-15 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்குர், பிரபஞ்சன் ஆகியோர் மறுபுறம் சிறுக சிறுக புள்ளிகளை சேர்த்து வந்தனர். இரண்டாவது பாதியில், திடீர் விஸ்வரூபம் எடுத்த கமல் போல, அதிரடியாக விளையாடியது.
ஆட்டம் முடிவடையும் நேரத்தில்
ஆட்டம் முடிவடையும் நேரத்தில், வழக்கமான பரபரப்பு, பதற்றம் இல்லாமல், அதை யு மும்பா அணிக்கு தமிழ் தலைவாஸ் கொடுத்துவிட்டது.. தீபாவளி நெருங்கிடுச்சே, போனஸ் வரவில்லையே என்று புலம்பும் மாத சம்பளக்காரர்கள் போல, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்று விளையாடியதால், யு மும்பா கடைசி நேரத்தில் வாய்ப்பை தவறவிட்டது.
பி பிரிவில் 5வது இடத்துக்கு
தற்போது 20 போட்டிகளில் 40 புள்ளிகளுடன், பி பிரிவில் 5வது இடத்துக்கு தமிழ் தலைவாஸ் முன்னேறியுள்ளது. 13ம்தேதி பெங்கால் வாரியர்ஸ் அணியையும், 14ம் தேதி பாட்னா பைரைட்ஸ் அணியையும் தமிழ் தலைவாஸ் அடுத்து சந்திக்க உள்ளது.