12 ஆண்கள் அணிகள்
ஆடவர் பிரிவில் இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ஈராக், ஜப்பான், கொரியா, மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, வங்கதேசம் ஆகிய 12 அணிகள் பங்கேற்க உள்ளன. முதல் முறையாக 12 அணிகள் பங்கேற்க உள்ளன.
மகளிர் பிரிவில் யார் யார்
மகளிர் பிரிவில் இந்தியா, இந்தோனேசியா, வங்கதேசம், ஈரான், ஜப்பான், கொரியா, இலங்கை, தாய்லாந்து, சீன தைபே ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன. மகளிர் பிரிவிலும் முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான அணிகள் பங்கேற்க உள்ளன.
அனைத்தும் இந்தியாவுக்கே
ஆடவர் கபடி பிரிவில் இதுவரை நடந்துள்ள 7 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியாவே தங்கம் வென்றுள்ளது. அதேபோல் மகளிர் பிரிவில் நடந்த இரண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியாவே தங்கம் வென்றுள்ளது.
தங்கம் கிடைக்குமா
இந்த முறையும் ஆடவர் மற்றும் மகளிர் கபடி அணிகள் தங்கத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளில் சில அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றன. மேலும் சில முக்கிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அதனால் முந்தைய ஆசிய விளையாட்டுப் போட்டிகளைப் போல சுலபமாக தங்கம் கிடைக்காது. சற்று போராட வேண்டியிருக்கும்.