கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அதிகமாக பரவத் துவங்கியது. அப்போது கடுமையான லாக்டவுன் விதிகள் அமல்படுத்தப்பட்டன. பலர் தங்கள் வேலையை இழந்தனர். பலருக்கும் குறைந்த சம்பளம் மட்டுமே கிடைத்தது.
மந்த நிலை
மக்களின் வாங்கும் திறன் வெகுவாக குறைந்தது. இந்திய பொருளாதாரம் மந்த நிலையை அடைந்தது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அதிக அளவிலான மக்கள் செலவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஐபிஎல் தொடர் நடந்தால் கிரிக்கெட்டை விரும்பும் பெரும்பாலான மக்கள் இயல்பு நிலைக்கு வரக் கூடும்.
அமேசான், ப்ளிப்கார்ட் விற்பனை
இந்த நிலையில் தீபாவளிக்கு முன் அமேசான், ப்ளிப்கார்ட் தங்கள் தளத்தில் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்து தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளன. ஆகஸ்ட் 6 அன்று துவங்கும் இந்த சிறப்பு விற்பனை அமேசானில் இரு நாட்களுக்கும், ப்ளிப்கார்ட்டில் நான்கு நாட்களுக்கும் நடைபெற உள்ளது.
ஏன் தள்ளுபடி விற்பனை?
லாக்டவுன் முதல் விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களை விற்க முடியாமல் தவித்து வருவதால் அவர்கள் தங்கள் பொருட்களை விற்று முதலை திரும்பப் பெறும் முயற்சியாகவும் இந்த தள்ளுபடி விற்பனை அமைந்துள்ளதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.
தீபாவளி திட்டம்
தற்போது சிறப்பு விற்பனையில் பணம் ஈட்டினால் மட்டுமே தீபாவளி காலகட்டத்தில் விற்பனையாளர்கள் அதிக பொருட்களை விற்பனை செய்ய முடியும். அடுத்த வாரத்தில் கிருஷ்ண ஜெயந்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துமா?