கிளாஸ்கோ: பளுதூக்கும் வீரருடன் தகராறு செய்ததாக காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற ஆஸ்திரேலியா வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த 29 வயதான பிரான்சிஸ் எடோன்டி, கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் 77 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
இவர் காமன்வெல்த் விளையாட்டு வீரர்கள் கிராமத்தில் வேல்ஸ் அணியின் பளு தூக்குதல் பிரிவு வீரருடன் தகராறில் ஈடுபட்டதாக ஸ்காட்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீஸ் காவலில் இருக்கும் பிரான்சிஸ் எடோன்டியின் அடையாள அட்டை அங்கீகாரத்தை ரத்து செய்ய காமன்வெல்த் விளையாட்டு பெடரேஷன் உத்தரவிட்டுள்ளது. அவரது பதக்கம் பறிக்கப்படுமா? என்பது பற்றி தகவல்கள் வெளியிடப்படவில்லை.