ஜகார்த்தா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்குவாஷ் இறுதியில் மகளிர் அணி ஹாங்காங் அணியிடம் தோல்வி அடைந்தது. நேற்று மலேசியா அணியை அரையிறுதியில் வீழ்த்தி இந்திய அணி இறுதிக்கு தகுதி பெற்றது.
இன்று மகளிர் அணி ஸ்குவாஷ் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. அதில் பங்கேற்ற ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனன்யா. தான்வி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி 0-2 என ஹாங்காங் அணியிடம் தோல்வி அடைந்தது. இதையடுத்து, இந்தியா வெள்ளி வென்றது.
மலேசியா மகளிர் ஸ்குவாஷ் அணி பலம் வாய்ந்த அணியாகும். அந்த அணியை அரையிறுதியில் வீழ்த்தியதால், இந்தியா இறுதியிலும் எளிதாக வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எனினும், வெள்ளியோடு திரும்பியுள்ளது இந்தியா.
இன்னும் ஓரிரு போட்டிகளே இந்தியாவிற்கு எஞ்சி உள்ள நிலையில், இந்தியா இதுவரை 68 பதக்கங்கள் வென்றுள்ளன. அதில் 15 தங்கமாகும்.