ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் கண்ணைப் பறிக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
போட்டிகளில் பங்கேற்கும் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அறிமுகம் முடிந்த பின், இந்தோனேசிய நாட்டின் கோடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆசிய ஒலிம்பிக் அமைப்பின் கொடி ஏற்றப்பட்டது.
பின்பு, நடைமுறைப்படி விழா பொறுப்பாளர்கள் மற்றும் இந்தோனேசிய அதிபர் வரவேற்றுப் பேசிய பின், 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமானதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், இந்தோனேசிய அதிபர்.