இளம் ரத்தம் அப்படித்தான் இருக்கும்
மும்பைக்கு வந்திருந்த லீ அங்கு பேசுகையில் இளம் வீரர்கள் அதிகம் இருக்கும்போதுதான் அணியும் சிறப்பாக ஜொலிக்கும். அது தற்போது இந்திய அணிக்கும் நடந்துள்ளது.
சிறப்பான வீரர்கள்
தற்போதைய இந்திய அணி சிறப்பாக உள்ளது. வீரர்கள் அச்சமின்றி ஆடுகின்றனர். இப்படிப்பட்ட அணி சிறிது காலத்திற்கு முன்பு வரை இல்லை.
டோன்ட் கேர்...
எதைப் பற்றியும் கவலைப்படாமல் வருகிற பந்துகளை சரியாக கணித்து ஆடுகிறார்கள் இவர்கள். நான் சிறப்பாக ஆடுவேன் என்ற நூறு சதவீத அர்ப்பணிப்பு உணர்வுடன் இவர்கள் ஆடுகிறார்கள். சிறப்பாகவும் செய்கிறார்கள்.
சூப்பர் டீம் கிடைச்சிருச்சு
இந்தியாவுக்கு சிறப்பான வீரர்களைக் கொண்ட அணி கிடைத்து விட்டதாகவே நான் கருதுகிறேன். இது பாராட்டுக்குரியது.
இஷாந்த் அபாரம்
குறிப்பாக இந்திய பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார். லார்ட்ஸ் மைதானத்தில் அவரது பந்து வீச்சு சிறப்பானதாக இருந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் 7 விக்கெட்கள் எடுப்பதென்றால் அது நிச்சயம் அபாரமான பந்து வீச்சு என்பதில் சந்தேகமில்லை.
நல்ல உயரம்.. நல்ல வேகம்
நல்ல உயரத்துடன் இஷாந்த் சர்மா இருப்பது முக்கியானது. எனவேதான் அவர் மிகச் சிறப்பாக செயல்பட முடிந்துள்ளது. நல்ல வேகத்திலும் அவர் பந்து வீசுகிறார். பவுன்சரையும் அவர் சரியாக பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளார் என்றார் லீ.
அட சண்டை நடந்துச்சா.. தெரியலையே பாஸ்....
சரி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜடேஜாவைத் திட்டினாரே அது பற்றி என்ன சொல்றீங்க என்று லீயிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ஸாரி, அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியலை. அதை நான் பார்க்கவும் இல்லை. மீடியாக்கள்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். எது நடந்திருந்தாலும், அதை அப்படியே விட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்க போக வேண்டும் என்பதே எனது கருத்து. கிரிக்கெட் பற்றி மட்டுமே நாம் கவலைப்பட வேண்டும் என்றார் லீ.