குதிரைக் கூட்டம்
முன்பு போல இப்போது குதிரைகளை கூட்டம் கூட்டமாக வைத்திருக்க முடியாது. காரணம் கொரோனா பரவல் விலங்குகளிடமும் ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளனர். எனவே குதிரைகளை பராமரிப்பதில் நிறைய சவால்கள் இருப்பதாக அமி கூறுகிறார். வழக்கமாக குதிரைகளை மேய்ச்சலுக்கு புல்வெளிகளில் மேய விடும்போது 10க்கும் மேற்பட்டவை இருக்கும். ஆனால் தற்போது அதை 4 குதிரைகளாக குறைத்து விட்டார்.
3 மீட்டர் இடைவெளி
அதுவும் கூட நல்ல இடைவெளி விட்டுத்தான் குதிரைகளை மேய விடுகிறார். குதிரைக் கொட்டடியிலும் கூட குதிரைகளுக்கு இடையே குறைந்தது 3 மீட்டர் இடைவெளி இருக்கும்படி அவற்றை வைத்துள்ளார். மேலும் ஒரு குதிரைக்குப் பயன்படுத்தும் பொருளை மற்ற குதிரைக்குப் பயன்படுத்துவதில்லையாம். 27 வயதாகும் மர்பி இங்கிலாந்தில் உள்ள 550 லைசென்ஸ் பெற்ற பயிற்சியாளர்களில் ஒருவர்.
மர்பியும் 50 குதிரைகளும்
மர்பியிடம் 50 குதிரைகள் உள்ளன. இவற்றைக் கொண்டு அவர் ரேஸ் பயிற்சி கொடுத்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், குதிரைகளுக்கு நமது தேவை அதிகம் உள்ளது. அவைகளால் எதையம் தாங்களாக செய்ய முடியாது மட்டும் அல்ல, இந்த நேரத்தில் அவற்றின் ஆரோக்கியத்துக்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது. குறிப்பாக அவற்றின் ரொட்டீனை நாம் பின்பற்றியாக வேண்டும்.
தினசரி ரொட்டீன்
முன்பு 10, 10 குதிரைகளாக ரொட்டீன் ரேஸ் வைப்போம். இப்போது அப்படி இல்லை. 4, 4 குதிரைகளைக செய்கிறோம். அதுவும் கூட நல்ல இடைவெளி விட்டுத்தான் செய்ய முடியும். மிகவும் கவனத்துடன் அவர்களின் ஆரோக்கியத்தை கவனித்து வருகிறோம். இது சோதனைக்காலம்தான். ஆனாலும் மிகச் சிறப்பாக அவை எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கின்றன என்று கூறுகிறார் அமி.