For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆப்பு வைத்த கொரோனா.. கிரிக்கெட், கால்பந்து வீரர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை!

டெல்லி : ஒரே பிரச்சனையில் சிக்கிக் கொண்டுள்ளன கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டுக்கள்.

இரண்டு விளையாட்டிலும் வீரர்கள் எச்சில் துப்புவது சர்வ சாதாரணம். கிரிக்கெட்டில் பந்தை தேய்க்க எச்சில் பயன்படுத்துவதும் வழக்கம்.

ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு உலகில் ஏற்பட்ட பின் வீரர்கள் அந்த பழக்கத்தை விட்டு விட வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விளையாட்டு அமைப்புகள்

விளையாட்டு அமைப்புகள்

சர்வதேச கிரிக்கெட் விளையாட்டை கட்டுப்படுத்தி வரும் ஐசிசி அமைப்பும், சர்வதேச கால்பந்து விளையாட்டை ஃபிபா அமைப்பும் விரைவில் இது குறித்து விதிகளில் மாற்றம் செய்ய உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதனால், வீரர்கள் சிக்கலில் உள்ளனர்.

பெருந் தொற்று நோய்

பெருந் தொற்று நோய்

கொரோனா வைரஸ் எனும் பெருந் தொற்று நோய் மனிதர்களிடம் இருந்து, பிற மனிதர்களுக்கு பரவி வருகிறது. அதனால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். ஆயிரக்கணக்கில் ரசிகர்களை கூட்டும் விளையாட்டுப் போட்டிகள் மொத்தமாக முடங்கி உள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு குறையும் பட்சத்தில் கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுக்களை ரசிகர்கள் இல்லாத அரங்கில் நடத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. அப்படி போட்டிகளை நடத்தும் போது செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விவாதம் நடந்து வருகிறது.

எச்சில் துப்பக் கூடாது

எச்சில் துப்பக் கூடாது

இரு விளையாட்டு அமைப்புகளுக்கும் மருத்துவ குழுக்கள் அனுப்பி உள்ள அறிக்கையின் படி வீரர்கள் இனி களத்தில் எச்சில் துப்பக் கூடாது என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கிரிக்கெட்டில் பந்தை தேய்த்து வடிவத்தை மாற்ற பந்துவீச்சாளர்கள் எச்சில் பயன்படுத்துவார்கள். அதற்கும் சிக்கல் எழுந்துள்ளது.

முன்னாள் வீரர்கள்

முன்னாள் வீரர்கள்

அது குறித்து முன்னாள் வீரர்களும், அதிகாரிகளும் ஆளுக்கு ஒரு கருத்தை கூறி வருகின்றனர். சிலர் அம்பயர் முன் செயற்கையான முறையில் பந்தில் வடிவத்தை மாற்ற அனுமதிக்கலாம் என கூறுகின்றனர். சிலர் எச்சில் பயன்படுத்துவதை எல்லாம் நிறுத்த முடியாது என கூறி உள்ளனர்.

கால்பந்து தடை

கால்பந்து தடை

அதே போல, கால்பந்து போட்டிகளில் வீரர்கள் வேகமாக, பரபரப்பாக ஓடி விளையாடும் போது இடையே களத்தில் எச்சில் துப்புவார்கள். அது அவர்களை அறியாமல் செய்யும் ஒரு செயல். இனி அதற்கும் தடை விதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

மஞ்சள் கார்டு

மஞ்சள் கார்டு

இனி கால்பந்து விளையாட்டில் வீரர்கள் களத்தில் எச்சில் துப்பினால் மஞ்சள் கார்டு கொடுக்கலாமா என ஃபிபா ஆலோசித்து வருகிறது. ஆக மொத்தத்தில் கொரோனா வைரஸ் இரண்டு பெரும் விளையாட்டுக்களை சிக்கலில் ஆழ்த்தி உள்ளது. வீரர்கள் இந்த சிக்கலால் குழப்பத்தில் உள்ளனர்.

Story first published: Wednesday, April 29, 2020, 10:38 [IST]
Other articles published on Apr 29, 2020
English summary
Coronavirus Impact : Cricket and Football players received warning from doctors
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X