டெல்லி : ஈரானை சேர்ந்த வட்டு எறிதல் வீரர் எஹ்சான் ஹதாதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து ஓரளவு மீண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் உடலை ஃபிட்டாக வைத்துள்ளவர்களுக்கு வராது என்ற மாயையை உடைத்து இருக்கிறது எஹ்சான் ஹதாதியின் அனுபவம்.
தன் அனுபவத்தை எஹ்சான் ஹதாதி பகிர்ந்து கொண்டுள்ளார். முதல்நாள் உடல்நலத்துடன் இருந்தாலும் மறுநாள் மரணம் அடையவும் கூடும் என்ற பாடத்தை அவருக்கு அளித்துள்ளது கொரோனா வைரஸ்.
தற்போதைய ஆசிய வட்டு எறிதல் சாம்பியன், 2012 ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஈரானின் முதல் தடகள வீரர் என்ற பல பெருமைகளை கொண்டவர் எஹ்சான் ஹதாதி. வட்டு எறிதல் வீரருக்கு தேவையான 135 கிலோ எடை கொண்ட, திடமான, ஆரோக்கியமான, பலமான மனிதர் தான் எஹ்சான்.
அப்படி ஒரு சிக்ஸ், இப்படி ஒரு சிக்ஸ்.. மொத்த பாகிஸ்தானையும் தன் பக்கம் இழுத்த தமிழக வீரர்!
கடந்த மார்ச் 23 அன்று அவரும், அவர் தந்தையும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டனர். இருவருக்கும் அந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. முதலில் தன்னை எதுவும் செய்யாது இந்த கொரோனா என எண்ணி உள்ளார் எஹ்சான்.
120 கிலோ எடையை வியர்க்காமல் தூக்கக் கூடிய ஆற்றல் கொண்டவர் எஹ்சான். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின் தான் இதுவரை இல்லாத அளவுக்கு பலவீனமாக உணர்ந்ததாக கூறி உள்ளார். முதல் பத்து நாள் மிக கடினமானதாக இருந்ததாக கூறி உள்ளார்.
பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து ஆறாம் நாள் சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டுள்ளர் எஹ்சான். அதன் பின் மெதுவாக அதில் இருந்து மீண்டுள்ளார். தடகள வீரர்கள் மிகவும் ஆரோக்கியமானவர்கள். தினமும் பயிற்சி செய்பவர்கள். அதனால், பெரிய பாதிப்பு ஏற்படாது. தான் விரைவில் மீண்டு விடுவேன் என தன் தந்தையிடம் முதலில் கூறி உள்ளார் எஹ்சான். ஆனால், அதன் பின் அவர் பாதிப்பின் உண்மையான அளவை அனுபவித்துள்ளார்.
எனினும், தற்போது அவரும், அவரது தந்தையும் பாதிப்பில் இருந்து ஓரளவு மீண்டுள்ளனர். அடுத்த வாரம் மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ள உள்ளனர்.