டெல்லி : முன்னாள் இந்திய மற்றும் மோஹன் பகன் அணி வீரர் மணிடோம்பி சிங் நீண்ட நாள் உடல் நிலை பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
மணிப்பூரின் இம்பால் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த மணிடோம்பி சிங்கின் மரணத்திற்கு மோஹன் பகன் மற்றும் ஏஐஎப்எப் இரங்கல் தெரிவித்துள்ளது.
கடந்த 2003ல் நடைபெற்ற எல்ஜி கோப்பையை இந்தியா அன்டர் 23 அணி வென்றது. இதில் முக்கிய வீரராக மணிடோம்பி விளங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த 1971க்கு பிறகு சர்வதேச கோப்பையை இதன்மூலம் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் இந்திய மற்றும் மோஹன் பகன் அணியின் கால்பந்தாட்ட வீரர் மணிடோம்பி சிங் மணிப்பூரின் இம்பால் அருகே தனது கிராமத்தில் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த 2003ல் நடைபெற்ற எல்ஜி கோப்பையை இந்தியா அன்டர் 23 அணி வென்றது. இந்த அணியின் முக்கிய வீரராக மணிடோம்பி விளங்கினார். கடந்த 1971க்கு பிறகு இந்திய அணி வென்ற சர்வதேச கோப்பை இது.
மணிடோம்பியின் மறைவுக்கு மோஹன் பகன் அணி தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளது. இதேபோல அனைத்திந்திய கால்பந்து பெடரேஷனும் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளது.
கடந்த 2003ல் மோஹன் பகன் அணியில் இணைந்த மணிடோம்பி, ஏர்லைன்ஸ் கோல்ட் கோப்பையை 2004ல் வென்றார். இதேபோல பல்வேறு வெற்றித் தொடர்களில் விளையாடியுள்ளார்.