கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. லாக்டவுன் சமயத்தில் ஓரளவு கட்டுக்குள் இருந்த பாதிப்பு லாக்டவுன் தளர்வுகளுக்கு பின் கடுமையாக அதிகரித்து வருகிறது.
12 லட்சத்தை தாண்டி உள்ளது
தினசரி பாதிப்பு இந்திய அளவில் 40,000த்தை தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 12 லட்சத்தை தாண்டி உள்ளது. இறப்பு எண்ணிக்கையும் ஒரு நாளுக்கு ஆயிரத்தை தொட்டுள்ளது. தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்து வருகிறது.
ஹர்பஜன் சிங்
இந்தியாவில் 4,26,000க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்த வண்ணம் உள்ளனர். இந்த செய்தியை பகிர்ந்துள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் யாராவது இதைப் பற்றி கவலைப்படுகிறீர்களா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
1 லட்சத்தை கடந்து விடும்
ஹர்பஜன் சிங் பதிவு - "இன்னும் கொஞ்ச நாட்களில் பாதிப்பு 1 லட்சத்தை கடந்து விடும். யாராவது இதைப் பற்றி கவலைப்படுகிறீர்களா?" என கேள்வி எழுப்பி உள்ளார். மக்கள் பலரும் கொரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரத்தை மறந்து விட்டதை சுட்டிக் காட்டி உள்ளது அவரது கேள்வி.
முன்னெச்சரிக்கை இல்லை
மார்ச், ஏப்ரலில் மக்கள் பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து வந்த நிலையில், லாக்டவுன் தளர்வுகளுக்கு பின் அவற்றை காற்றில் பறக்க விட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால் ஒரு நாளுக்கு 1 லட்சம் பேர் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என்பதே உண்மை.