தாஷ்கன்ட்: தாஷ்கன்ட் ஏடிபி சாலஞ்சர் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் வெற்றி பெற்றார்.ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடர் உக்ரைன் தலைநகர் தாஷ்கன்டில் நடக்கிறது. நேற்று நடந்து முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் சோம்தேவ், ஸ்பெயின் வீரர் கில்லர்மோ ஓலசோவை எதிர் கொண்டார்.இதில் சிறப்பாக விளையாடிய சோம்தேவ் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் ரோஹன் போபன்னா 4-6, 2-6 என்ற செட்களில் சீன தைபே வீரர் ஹூசுன் யென் லூவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். #13;