பாலெம்பங்: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரின் தொடக்க சுற்றில் இந்திய பெண்கள் கூடைப்பந்து மற்றும் ஆண்கள் ஹேண்ட்பால் அணி ஆகியவை தோல்வி அடைந்தன.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று (ஆகஸ்ட் 18) தொடங்க உள்ளது. எனினும், கால்பந்து, ஹேண்ட்பால், கூடைப்பந்து உள்ளிட்ட சில போட்டிகள் நெருக்கமான அட்டவணை காரணமாக முன்பே தொடங்கி உள்ளன.
இந்திய பெண்கள் கூடைப்பந்து அணி, கஜகஸ்தான் அணியிடம் 61-79 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. ஆட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் கால் பகுதிகளில் 13-18, 12-19 என பின் தங்கிய இந்திய அணி, மூன்றாவது கால் பகுதியில் சற்று போராடி 21-22 என கஜகஸ்தான் அணியின் வேகத்துக்கு நெருங்கி வந்தது. நான்காவது மற்றும் இறுதி கால் பகுதியில், கஜகஸ்தான் 20-15 என புள்ளிகள் பெற்றதை அடுத்து, அந்த அணி 79-61 என வெற்றி பெற்றது.
அடுத்த சுற்றுப் போட்டிகளில், இந்திய பெண்கள் கூடைப்பந்தாட்ட அணி, ஒருங்கிணைந்த கொரியா, இந்தோனேசியா மற்றும் சைனீஸ் தைபே ஆகிய அணிகளை சந்திக்க உள்ளது.
[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]
இந்திய ஆண்கள் ஹேண்ட்பால் அணி ஈராக் அணிக்கு எதிராக 29-40 என தோல்வி அடைந்தது. ஆட்டத்தின் முதல் பகுதியில் இந்திய அணி 13-18 எனவும், இரண்டாவது பகுதியில் 16-22 எனவும் பின்தங்கி தோல்வியை தழுவியது.
தனது தொடக்க சுற்றில் இந்திய ஆண்கள் ஹேண்ட்பால் அணி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து, தொடரை விட்டு வெளியேறும் நிலையில் இருக்கிறது.