தென் கொரியாவின் இன்சியான் நகரில் 17வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பெண்கள் கபடி இறுதிப் போட்டியில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின.
வழக்கம் போல இந்திய வீராங்கனைகள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். ஈரான் அணியினரும் சளைக்காமல் பதிலடி கொடுத்தனர்.
முதல் பாதி முடிவில் 15-10 என இந்திய அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடந்த 2வது பாதியில் இந்திய வீராங்கனைகள் ஜொலித்தனர்.
ஆட்டத்தின் இறுதியில் இந்திய பெண்கள் அணி 31-21 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
கடந்த 2010 ஆசிய விளையாட்டினை தொடர்ந்து 2வது முறையாக, இந்திய பெண்கள் கபடி அணி, தங்கம் வென்றது.
மொத்தம் 10 தங்கப்பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.