மறுத்த தாயார்
இது குறித்து அவரது தாயார் அக்கோஜி கூறியதாவது: மகள் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்த அந்த பெண், எனது மருமகளின் பெண்,.. அதாவது என்னுடைய பேத்தி. எனக்கு பேத்தி என்றால் துத்திக்கு மகள் முறை வருகிறது. ஒரு மகளை தாய் திருமணம் செய்து கொள்வதை சமூகம் ஏற்குமா?
கவனம் வேண்டும்
மகளிடம் இது பற்றி பேசியபோது, நீதிமன்ற உத்தரவை என்னிடம் காட்டுகிறார். இந்த விஷயத்தை எல்லாம் கைவிட்டு விட்டு துத்தி சந்த், விளையாட்டில் தமது கவனத்தை செலுத்த வேண்டும். நான் எனது மகளிடம் இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொன்னதற்கு நீதிமன்றம் உத்தரவு என்னிடம் இருக்கிறது என்கிறார்.
ஏற்க மாட்டோம்
அவர்கள் இப்போது எங்கு இருக்கீறார்கள் என்று தெரியாது. ஆனால் டுட்டீ இதை எல்லாம் மறந்துவிட்டு விளையாட்டில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஒரு பெண் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற தீர்ப்பு சமூகத்திற்கும், சட்டத்தின் முன் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் எங்களை போன்ற கிராமவாசிகளால் ஏற்க முடியாது என்று கூறினார்.
சகோதரி மிரட்டல்
இந் நிலையில் இந்த விவகாரத்தில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமது உறவு முறை குறித்து குடும்பத்தாருக்கு முன்னரே தெரியும் என்றும், அதை பயன்படுத்தி தம்மிடம் 25 லட்சம் ரூபாய் தருமாறு மிரட்டுகிறார் என்று துத்தி சந்த் கூறியிருக்கிறார்.
வெளியில் சொல்லிவிடுவேன்
அவர் மேலும் கூறியதாவது: தான் ஓரினச்சேர்க்கையாளர் என்பது எனது குடும்பத்துக்கு முன்பே தெரியும். அதனை பயன்படுத்தி எனது சகோதரி சரஸ்வதி ரூபாய் 25 லட்சம் கேட்டு தன்னை மிரட்டினார். 25 லட்சம் ரூபாய் தர வில்லை என்றால் தான் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை வெளியில் அனைவரிடத்திலும் தெரிவித்து விடுவேன் என்று சகோதரி சரஸ்வதி மிரட்டினார்.
யாரும் கிடையாது
அந்த நெருக்கடியின் காரணமாக தான் ஓரினச் சேர்க்கையாளர் என்பதை வெளிப்படையாக அறிவித்தேன் என்றார். ஆனால், அவரது சகோதரி சரஸ்வதி இதை முழுவதும் மறுக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: என்னை தவிர அவரை புரிந்து கொண்டவர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை.
கவலைப்பட மாட்டேன்
அவர் மனது தங்கம் போன்றது. எனவே உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி, ஒலிம்பிக் ஆகியவற்றில் தான் அவரது முழு கவனமும் இருக்க வேண்டும். பிளாக் மெயில் செய்கிறார் என்று அவர் கூறுவது பற்றி கவலையில்லை. நானும் ஒரு தடகள வீராங்கனை, 7 வயதில் அவரை நான் தான் தடகள பயிற்சிக்கு அழைத்துச் சென்றேன் என்பதை மறக்க வேண்டாம் என்றார்.