சென்னை: டைமண்ட் லீக் தொடரில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கோப்பை வென்று அசத்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சல் நகரத்தில் டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஈட்டி எறிதல் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நீரஜ் சோப்ரா களமிறங்கினார்.
இந்த இறுதிப்போட்டியில் தனது முதல் வாய்ப்பிலேயே நீரஜ் சோப்ரா ஃபவுலுடன் தான் தொடங்கினார். ஆனால் மற்ற வீரர்கள் நன்றாக வீசி, நீரஜை முந்தினர். ஆனால் 2வது முயற்சியில் அட்டகாசமான கம்பேக் கொடுத்த நீரஜ் சோப்ரா 88.44 மீ தூரம் எறிந்து சாதனை புரிந்தார். இதனால் டாப் இடத்திற்கும் சென்றார்.
நீரஜ் வீசிய 3வது த்ரோவும் 88 மீ தூரம் மற்றும் 4வது முயற்சியில் 86.1 மீ தூரமே எறிந்ததால், டைமண்ட் லீக் கோப்பையை வென்று அசத்தினார். இந்த மதிப்புமிக்க டயமண்ட் லீக்கில் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் நீரஜ் ஜோப்ரா பெற்றார்.
அணிக்குள் வரும் 3 சீனியர் வீரர்கள்.. இலங்கைக்கு எதிரான இந்திய ப்ளேயிங் 11.. ரோகித் படு மாஸ் ப்ளான்!