பார்சிலோனா: உலகின் மிகப் பிரபலமான கால்பந்து வீரர் நெய்மரை, 1,677 கோடி ரூபாய்க்கு, பார்சிலோனா கால்பந்து அணியிடமிருந்து, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மன் அணி (பி.எஸ்.ஜி.) அணி விலைக்கு வாங்கியது தற்போது பெரிய செய்தி அல்ல.
தங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதாக, நெய்மர் மீது, 65 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு பார்சிலோனா கால்பந்து அணி வழக்கு தொடர உள்ளதுதான் பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.